உனக்கென்ன பேசிவிட்டு
சென்று விடுகின்றாய்
என் இரவிடம் கேள்
நான் எப்படி உறங்குகிறேனென .
இன்று அதிகாலை யுத்தத்தின் முடிவில்
பகல் ஜெயித்து
பின் சிரித்த அந்த
நமட்டு சிரிப்பும்..
நீ சிரிப்பதும் ..
ஒன்றுக்கொண்டு என்னை
மௌனமாய் வருடி
உன் நினைவை முழுதும்
விதைத்து சென்று - என்
மனமும் மௌனமும்
உன் நினைவில் மிதப்பது
பின் ஒரு இரவின் தொடக்கம் வேண்டி
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment