Pages

ஒரு மாலை நேரம்: நான் மகான் அல்ல


ஒரு மாலை நேரம் - நான் மகான் அல்ல:

ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதில் ஓரம் சென்றது சென்றது பூப்போட்டு

வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எதிரே காதல் பாடும் தாலாட்டு

இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்தேனே சில நாளாய் நானே
கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்
சிறுப்பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க

ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதில் ஓரம் சென்றது சென்றது பூப்போட்டு

தினம் உன்னை பார்க்கும்போது
இடையினில் தோன்றும் அந்த
ஊடலும் அன்பே ஐயோ அழகானது

ஓ. ஓ. ஓ……
தனிமையில் நீயும் நானும்
கண்களாலே பேசும் போது
எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது

அச்சமா நாணமா அன்பிலே கொல்வதோ
உன்னிடம் ஈர்த்தது எதுவோ தெரியலையே

ஹே… எப்போதும் பூக்கள் பூக்கும் புரியாதது
எப்போது காதல் தாக்கும் தெரியாதது
ஹே… எப்போதும் பூக்கள் பூக்கும் புரியாதது
எப்போது காதல் தாக்கும் தெரியாதது

ஹோ… மழை வரும் நேரம் முன்பு தரைவரும் காற்றைபோல
மனமெங்கும் வந்தாய் பெண்ணே சில்லென்று நீ….

தூவும் மழை நின்றப்பின்பு தூரல் தரும் மரங்கள் போல
நினைவுகள் தந்தே செல்வாய் என்றென்றுமே

ஓ…. ஹோ…. ஹோ…
கண்களா கன்னமா பார்வையா வார்தையா உன்னிடம் பிடித்தது
எதுவோ தெரியலையே..

எப்போதும் பூக்கள் பூக்கும் புரியாதது
எப்போது காதல் தாக்கும் தெரியாதது
எப்போதும் பூக்கள் பூக்கும் புரியாதது
எப்போது காதல் தாக்கும் தெரியாதது

ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதில் ஓரம் சென்றது சென்றது பூப்போட்டு

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...