உன் மேலுதட்டு உஸ்னத்தில்
கரைகிறது என் மனம்
பொட்டுக் கருவிழியதில்
முட்டிச் சிக்கியது நினைவு
உலர்ந்த ஒற்றை முடியதில்
ஒளிந்தது என் காலம்
கன்னத்தின் சிரு குழியில்
புதைத்து விட்டு உன்னிடமே கேட்கிறேன்
தொலைந்த என்னுயிரை
என்னிடமில்லை எனினும்
உன்னிடமே வைத்துக் கொள்ள
மெதுவாய் கையாள் என்னுயிரை
என் உயிர் தொட்டதால்
நின் உடல் கண்ட சூடு
மெல்லவே தணியும்
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment