என் மௌனம் கலைத்த
உன் முதல் பேச்சின் ஆழம்
அலட்சியமாய் நீ சொல்லும்
அழகு மொழிச் சிதறல்
பட்டெனச் சுட்டிடும் உன்
கோபச் சிதறல்
ஒரு மலரதின் கோபப்
பிரசவ நேரம்
எப்படியெனினும் பேசிக் கொள்
இல்லை ஒரு நொடி
பேசாது கொல்
மனம் தொட்டு ஒரு முறை சொல்லிவிடு
நான் உனக்காய்
எதை விட்டு
எப்படித் தொட்டு
நம் மௌனம் கலைக்க
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment