Pages

உன் தவறில்லை




திணறி விழுந்த கடைசி
மழைத் துளி
தூவிச் சென்ற
உன்னருகாமை கதகதப்பு

நீ விட்டுச் சென்ற
ஊடல் பிரளயத்தில்
அடங்கி நிற்குமென்
வலி ததும்பும்
மனக் குவியல்

தூரத்துக் கொடியில்
உலரும் உன் உடை
வீசும் உன் வாசம்

நீ இல்லையென்ற இந்நொடி
உன் பிரிவை விதைத்து செல்ல

எப்படி சொல்லிட
உன் தவறில்லையென
நீ எளிதாய் சொல்வதையும்

உன் தவற்றை காட்டி
என்னை முத்தத்தால்
கொல்வதையும்.

2 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..

Unknown said...

வ‌ந்து செல்லுங்க‌ள் தோழ‌ரே
அடிக்க‌டி

உங்க‌ள் வாழ்த்துக்கு
ந‌ன்றிக‌ள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...