வீழ்ந்து கிடந்த ஒரு நொடித்
தூக்கத்தின் முடிவில்...
கை கோர்த்து எழ நீயின்றி
தடுமாறி வீழ்கையில்
தெரிந்ததுன் பிரிவு.
ஒற்றை கண் மூடிதிறக்கையில்
ஒளிந்து கிடந்த உன் நினைவு
உறைந்த போன என்னுயிரை
உரசிப் பார்த்திட
புரண்டு படுத்து உருளுகையில்
உன் வாசம் நிறைந்த
தலையணை ஓரம்
உன்னினைவை என்னுள் விதைக்கிறது
Showing posts with label உன் வாசம். Show all posts
Showing posts with label உன் வாசம். Show all posts
உன் தவறில்லை

திணறி விழுந்த கடைசி
மழைத் துளி
தூவிச் சென்ற
உன்னருகாமை கதகதப்பு
நீ விட்டுச் சென்ற
ஊடல் பிரளயத்தில்
அடங்கி நிற்குமென்
வலி ததும்பும்
மனக் குவியல்
தூரத்துக் கொடியில்
உலரும் உன் உடை
வீசும் உன் வாசம்
நீ இல்லையென்ற இந்நொடி
உன் பிரிவை விதைத்து செல்ல
எப்படி சொல்லிட
உன் தவறில்லையென
நீ எளிதாய் சொல்வதையும்
உன் தவற்றை காட்டி
என்னை முத்தத்தால்
கொல்வதையும்.