Pages

ஒற்றை விசில்




வழக்கமான ஒற்றை விசில்
கேட்டு நான் துயில் எழ

உன் பாச சத்தமும்
முத்தம் கலந்த
தேநீரும் இல்லை

குழித்து முடிந்து விரைந்து நிற்க
கதகதப்பினூடான
பூந்துவலை துவட்டலும்
அருகாமை வாசமும்

உடைதறிக்கையில்
நின் இடைதளுவலும்

காலை உணவின்பின்
மீந்து சென்ற ஒற்றை
பொங்கல் மிச்சதின் - கடைசிப்
பருக்கை தொட்டுத்துடைத்து
திங்க நீயில்லை

வாசல் வரை வந்து நீ
விடை தர நான் இடை தொட
ம் என்ற சத்தமும்
ம் ம் என்று
நீ தரும் முத்தமும்

இழந்து இங்கு உன் நினைவில்
உடைந்து நிற்க

வாழ்த்துச் சொல்லி
நீ அனுப்பிய குறுஞ் செய்தி
வந்ததை அலைபேசி
சொல்லிட
வழக்கம் போலத் தான்
மற்றொரு ஒற்றை விசில்
உன் நினைவில்

3 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...

தாயுமானவள் said...

கவிதை எழிமை கருத்து முத்தம்

Unknown said...

நன்றி தோழர்களே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...