Pages

என் இதயம் துடிக்க

தீவைச் சுற்றி நிற்கும் 
கடலாய் நான் 
தீவின் ஒருதுளித் தீர்த்தமாய் நீ .

புதைந்து கிடக்கும் உன் 
புன்னகையின் ஓரத்தில் 
வழிகிறது என்னுயிர் .

மகரம் கண்டு விரிந்த 
உன் மலரிதழ்க்கிடையில் 
பூசிய தேனாய் உன் சிரிப்பு 

சிரிப்பின் முடிவிலிருந்த 
கன்னக் குழியின் கடைசியில் 
ஜொலிக்கும் வைரமாய் உன் பற்கள்

புன்னகை வழிந்தோட உனைக் கண்ட 
அந்நொடி - இப்போதும் 
உள்ளம் உறைய 
உதடு நொறுங்க 
உயிர் பெருத்து 
உன் சந்நிதியில் நான் சரிய

முழுதாய் ஒரு சிரிப்பை 
விட்டுச் செல் 

என் ஆடும் உயிர்
நிலைக்கவும்
நின் பெயர் சொல்லி என் இதயம் 
துடிக்கவும்.  

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...