Pages

எந்திரன் பாடல் வரிகள்: புதிய மனிதா பூமிக்கு வா Enthiran: Lyrics- Pudhiya Manitha Poomikku Vaa | எந்திரன்: புதிய மனிதா





புதிய மனிதா பூமிக்கு வா
எஹ்ஹை வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட்டிஸ்க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி.

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு
எந்திரா ... எந்திரா
என் எந்திரா


நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கணயைம் துன்பமில்லை
இதயக் கோளாரெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை.

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது
மரிப்பதே இல்லை.

இதோ
என் எந்திரன்
இவன் அமரன்.

நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் – என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே.
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒளி.

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கொண்டது ஒரு பிறவி
நான் கண்டது பல பிறவி

ரோபோ ரோபோ
பன்மொழிகள் கற்றாலும்
என்தந்தை மொழி
தமிழ் அல்லவா

ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும் என் கர்தாவுக்கு
அடிமை அல்லவே

இப்பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.



0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...