Pages

உள்ளதென அறியாமல்

இருந்த ஒரு உயிர் உன் ஒற்றைக்
கேள்வியில் உடைந்து சில்லாக
பிறக்கும் முன்பே
இறந்த குழந்தையாய்
நான் .

கூடி நின்ற கண்ணீர்
கண்ணைக் கல்லறையாக்க
ஒரு துளி மின்சாரக் கனவுடன்
என் இன்றைய பொழுது

வழக்கம் போலத்தான்
உன் ஒற்றைக் கேள்வி
மனதையும் மானத்தையும்
புரட்டிபோட

தீய்ந்த மனம் இன்னும்
உன்னைத் தொடர்ந்து
என்னவெல்லாம் உள்ளதென
இன்னும் அறியாமல்.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...