Pages

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே |

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

தென்றலைத் தூதுவிட்டு
ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு
இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...