உன் கை தொட்டு
என் உயிர் பிடித்து
நடந்த ஒரு நொடி
நானில்லை என்னிடத்தில்
துடித்து கொண்டே இருக்கும்
என்னிதயதிற்கென்ன தெரியும்
உன் நினைவுக் காதலில்
அது நில்லாமல் துடிக்கிறதென
பின் நான் நடக்க
முன் நீ நடக்க
உதிர்ந்து விழுந்த
உன் ஒற்றைப்
பூவிதழ் போலத்தான்
என் மனம்
நின்னருகாமை வாசத்தில்
சருகாவது
உன் நெருக்கத்தில் மீட்டிடுமென
முடிக்கி வாய்த்த என்னுடல்
படிக்கத் துடிக்கும் உன்
உயிர் ஓசை
உன் நினைவை தேடி துடிக்கும்
ஒவ்வோர் நொடியும்
எனை மறக்கச் செய்து
உன் நினைவை
தூவிச் செல்ல
அனிச்சையாய் என் நினைவு
நானில்லை எனில்
எப்படி இருக்குமென நீ கேட்க
உன்னை மட்டுமே
சுமந்து துடிக்கும்
என்னிதயம்
எப்படி இருக்கும்
உன் நினைவை விட்டு
4 வாசகர் கருத்துக்கள்:
நல்ல அழகான வரிகள்...
அழகான கவிதையும் கூட...
வாழ்த்துக்கள்...
நல்லா இருக்குதுங்க.. சிறப்படைய வாழ்த்துக்கள்..
நன்றி தோழர்களே
வந்து செல்லுங்கள்
என் வலைப் பூவிற்கு
இல்லையெனில் தங்கள்
மின்னஞ்சல் கொண்டு
பதிவு செய்யுங்கள்
அருமையான கவிதை ... நன்றி .
Post a Comment