Pages

நானில்லை எனில்

உன் கை தொட்டு
என் உயிர் பிடித்து
நடந்த ஒரு நொடி
நானில்லை என்னிடத்தில்

துடித்து கொண்டே இருக்கும்
என்னிதயதிற்கென்ன தெரியும்
உன் நினைவுக் காதலில்
அது நில்லாமல் துடிக்கிறதென

பின் நான் நடக்க
முன் நீ நடக்க
உதிர்ந்து விழுந்த
உன் ஒற்றைப்
பூவிதழ் போலத்தான்
என் மனம்
நின்னருகாமை வாசத்தில்
சருகாவது



உன் நெருக்கத்தில் மீட்டிடுமென
முடிக்கி வாய்த்த என்னுடல்
படிக்கத் துடிக்கும் உன்
உயிர் ஓசை

உன் நினைவை தேடி துடிக்கும்
ஒவ்வோர் நொடியும்
எனை மறக்கச் செய்து
உன் நினைவை
தூவிச் செல்ல
அனிச்சையாய் என் நினைவு

நானில்லை எனில்
எப்படி இருக்குமென நீ கேட்க
உன்னை மட்டுமே
சுமந்து துடிக்கும்
என்னிதயம்
எப்படி இருக்கும்
உன் நினைவை விட்டு

4 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

கமலேஷ் said...

நல்ல அழகான வரிகள்...
அழகான கவிதையும் கூட...
வாழ்த்துக்கள்...

சிவாஜி சங்கர் said...

நல்லா இருக்குதுங்க.. சிறப்படைய வாழ்த்துக்கள்..

Unknown said...

நன்றி தோழர்களே
வந்து செல்லுங்கள்
என் வலைப் பூவிற்கு

இல்லையெனில் தங்கள்
மின்னஞ்சல் கொண்டு
பதிவு செய்யுங்கள்

Unknown said...

அருமையான கவிதை ... நன்றி .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...