Pages

என் கண்ணீர் | My Tears




பேசிய உன் விழி
பொங்கித் ததும்பிய
உன் கோபம்
கண் விழி முட்டி நின்ற
என் ஒரு துளிக்
கண்ணீர்

தொட்டு விடும் தூரத்தில் நீ இருந்தும்
துடைக்க மனமின்றி நான்

உடைந்து விழுந்த என்
கண்ணீர் நிலம் தொட
யாரும் காணும் முன்பே
நானதை தொட்டு துடைக்க
உன் விசும்பலுக்கென்ன
தெரியும்

என் கண்ணீர் பிம்பத்தில்
நிறைந்து நின்றது
உன் பிம்பமென்றும்
எவரும் அதை
காணக் கூடாதென்றும்.

2 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

கமலேஷ் said...

அழகான வழியான கவிதை...

Unknown said...

நன்றி கமலேஷ்
தங்களின் வருகைக்கும்
வழி மொழிவுக்கும்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...