Pages

பின்னிரவு தொடக்கத்தில்




பின்னிரவு தொடக்கத்தில்
என்னவளுன் நினைவு
தொடர்ந்த பிம்பமாய்

தொலைக்க துடித்த
என்னுயிர் - துடித்து
அடங்க மறுத்திட

எப்படி உறங்கிட
நிரம்பி வழியும்
உன் நினைவுக் கோப்பையை
என் சபலக் கண்ணாடி
உடைக்க முயல்கையில்

வந்து பின் செல்லும்
உன் நி னைவனைத்தும்
என் உயிர் தொட்டு
ஜீவன் குழைத்து
நினைவு திருடி
என் உயிர் வலிக்க
உன்னை என்னுள்
விதைத்து செல்கையில்

இன்னும் என்னவளே
பின்னிரவு தொடக்கத்தில்
என்னவளுன் நினைவு

2 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

கமலேஷ் said...

அழகு..

ரொம்ப நல்ல இருக்கு..

Unknown said...

நன்றி தோழரே
வந்து செல்லுங்கள்
என் வலைப் பூவிற்கு
இல்லையெனில் தங்கள்
மின்னஞ்சல் கொண்டு
பதிவு செய்யுங்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...